தளம்
முக்கிய செய்திகள்

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு!

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள் முன்னர் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஒரு நாள் சேவையின் கீழ், வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்போது மூவாயிரத்திலிருந்து 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், வழமையான முறையின் கீழ் ஒரு நாளைக்கு 600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Fourudeen Ibransa
3 years ago

தமிழ் அமைப்புக்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது! – ஜி.எல்.பீரிஸ்

Fourudeen Ibransa
3 years ago

யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு .!

Fourudeen Ibransa
3 years ago