உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சில பிரச்சினைகளுக்கு தீர்வை கண்ட பின்னர் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார்.

225 பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பும் உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை அரசியல் தலைவர்களும் மக்களும் உலகுக்கு நிரூபிக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.