போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிககும் வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து 500 இற்கும் மேற்பட்டோர் தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கிடையில் நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் மோரை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இன்று அதிகாலை சுமார் 500 முதல் 600 வரையானோர் தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபட்டுவருகின்றனர்.