ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று முதல் தமது ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகப்பூர்வமாக விலகியதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான அரசியலமைப்பிற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என்றும் அறிவித்தார்.