இலங்கையில் நாளைய தினம் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் தாம் உறுதி செய்வதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த கலந்துரையாடலில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார் . சமகாலத்தில் ராஜபக்ஷர்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சியை அடுத்து மஹிந்த உட்பட அவரது குடும்ப உறுப்பினர் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரணிலின் வெற்றிக்காக மஹிந்த வெளிப்படையாக கலந்துரையாடலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.