இலங்கைக்கான  கடன்திட்ட பேச்சுவார்த்தையினை    விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக   சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின்  நிர்வாகப் பணிப்பாளர் Kristalina Georgieva   சர்வதேச ஊடகமொன்றுக்கு  இன்று  வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

இடைக்கால ஜனாதிபதி தலைமையிலான  நிர்வாகத்துடன் சர்வதேச நாணய நிதியம்  இணைந்து செயற்படும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.