அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் வியாபாரங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களில் பல வாகனங்கள் இருந்தால், அந்த வாகனங்களுக்கு ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் QR குறியீட்டில் எரிபொருளை பெற பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி தமது பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.