அரசு ஊழியர்கள் வெள்ளிக் கிழமைகளில் பயிர் செய்தற்காக வழங்கப்பட்டிருந்த விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிய போக்குவரத்து நெருக்கடி காரணமாக வெள்ளிக் கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவித்து பொதுநிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

எனினும், தற்போது பொதுப்போக்குவரத்து படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவதால், எதிர்வரும் வாரம் முதல் வெள்ளிக் கிழமைகளில் அரச அலுவலகங்கள் வழமைபோல இயங்கும் என அமைச்சரவவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.