யாழில் வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான முதலாம் கட்ட நேர்முகத்தேர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேர்முகத்தேர்வு எதிர்வரும் 17ஆம், 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தென்மராட்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழிகாட்டலில் தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படுகிறது.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் குறித்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேர்முகத்தேர்விற்கு வரும்போது தொழில் தகைமைச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களுடன் சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.