அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என்று மொட்டு கட்சியின் எம்.பியான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், 22 ஐ பயன்படுத்தி அரசாங்கத்தை பிளவுபடுத்தும் எதிரணியின் முயற்சி கைகூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.