ஒற்றை நாடி உடம்பில் அனைவரையும் சொக்க வைக்கக்கூடிய சாக்‌ஷி அகர்வால் சிறிய கண்கள் உடையவர் என்றாலும் பார்வையால் அனைவரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய காந்த கண்ணழகி என்று கூறலாம். இன்றும் பல இளைஞர்களின் செல்போன்களில் டிபியாகத் திகழும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தமிழ் திரையுலகில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைத் தந்த சூப்பர் ஸ்டாரின் காலா திரைப்படத்திலும் தல அஜித் குமாரின் விஸ்வாசம் படத்திலும் காமெடி ட்ராக்கை திரைப்பட கதையை அமைத்து கலக்கி வரும் சுந்தர் சி யின் திரில்லான பேய் படமான அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.
ஒற்றை நாடி உடம்பில் அனைவரையும் சொக்க வைக்கக்கூடிய சாக்‌ஷி அகர்வால் சிறிய கண்கள் உடையவர் என்றாலும் பார்வையால் அனைவரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய காந்த கண்ணழகி என்று கூறலாம். இன்றும் பல இளைஞர்களின் செல்போன்களில் டிபியாகத் திகழும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தமிழ் திரையுலகில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைத் தந்த சூப்பர் ஸ்டாரின் காலா திரைப்படத்திலும் தல அஜித் குமாரின் விஸ்வாசம் படத்திலும் காமெடி ட்ராக்கை திரைப்பட கதையை அமைத்து கலக்கி வரும் சுந்தர் சி யின் திரில்லான பேய் படமான அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.

முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் அமர கடும் உழைப்பை போட்டு எந்த அளவுக்கு அவர் உயர்ந்திருக்கிறார். தற்போது இவர் கதை நாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் மட்டுமே நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து தரமான படங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது இவர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பஹிரா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிகரும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக நான் கடவுள் இல்லை என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் கெஸ்ட் சாப்டர் 2 அனிமல் திரில்லர் படத்தில் முக்கிய கதாநாயகி வேடத்தில் நடித்து வருகிறார். அத்துடன் அறிமுக இயக்குனர் விக்கி இயக்கத்தில் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாக ஒரு அழுத்தமான வேடத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் இவர் கந்தக்கோட்டை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனை அடுத்து இவர் கதையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைகளில் மட்டுமே நடிக்க விரும்புவதாக வெளிப்படையாக கூறியிருப்பது தயாரிப்பாளர்கள் இடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் அதீத கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது பட வாய்புகளுக்காக அல்ல, என்னுடைய ரசிகர்களை ஆக்டிவாக வைத்துக்கொள்வதற்காக என்று கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை கொண்ட இவரது சமூக வலைதள பக்கம் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.