தளம்
பிரதான செய்திகள்

காணாமல் போன வயோதிபர் சடலமாக மீட்பு…!

அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல்போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கலட்டி கரணவாய் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கலட்டி கரணவாய் கிழக்கை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க வயோதிபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காணாமல் போனதை அடுத்து அவரது உறவினர்களால் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் கரணவாய் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை..!

Fourudeen Ibransa
3 years ago

ரணில் பிரதமர் பதவிலிருந்து அவுட் !

Fourudeen Ibransa
2 years ago

பொங்கலுக்கு மற்றொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

Fourudeen Ibransa
2 years ago