(யூஎல்எம். பஸீல் Independent media watch)
அட்டாளைச்சேனை பிரதேச சர்வமதக்குழுவின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் சர்வமதக்குழுவின் இணைத்லைவரும் றுஹுணு லங்கா அமைப்பின் தலைவருமான அஷ்ஷேஹ்.MS. ஜஃபர்( நளீமி) தலைமையில் அக்கரைப்பற்று Ainah Beach View Resortயில் அண்மையில் இடம்பெற்றது.

இச்சர்வமதக்குழு தேசிய சமாதானப் பேரவையின் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று பொலிஸ்,அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அனைத்து மதத்தலைவர்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டு இயங்கிவரும் அமைப்பாகும். இம்மீளாய்வு ஒன்று கூடலில் தேசிய சமாதானப் பேரவையின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் U.உவைஸ் மதனி கலந்துகொண்டு நீடித்த சமாதானம், சகவாழ்வு, இன ஐக்கியம் பற்றியும் இக்குழுவின் கடந்த கால முன்னேற்றச் செயற்பாடுகள் பற்றியும் கருத்துரை வழங்கினார்.


இவ்வொன்று கூடலில் சர்வமதத் தலைவர்கள்,அரச உத்தியோகத்தர்கள், மற்றும் றுஹுணு லங்கா அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்