இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வெளிநாட்டு பயணத் தடை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க அதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டயனா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, பயணத்தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்தக் கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதவான் அறிவித்ததுடன், அதுவரை பயணத்தடை நீடிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.