மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் இன்று காலை காலமானார்.

நீண்டநாள் நோய்வாய்பட்டிருந்த அவர், நுவரெலியாவில் தனது இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 79ஆகும்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 24 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு நவரெலியா பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.