2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் ஒரு சில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கலாம் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சர்வ ஜன நீதி அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வரிகளை அதிகரித்து அரசாங்கம் மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.