ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர்.

மசாஜ் நிலையத்தின் முகாமையாளர் குருநாகலையைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான பெண்கள்

அத்துடன் கைதான பெண்கள் இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிய சேர்ந்தவர் என்றும், மற்றையவர் ,பயாகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதிகள் இருவரும் 23, 32 வயதுகளை உடையவர்கள் என்றும் ஆரம்பவிசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினரயினர் தெரிவித்தனர்.

மேலும் பொலிஸாருக்கு  கிடைத்த இரகசிய தகவலைக்கொண்டு நீதிமன்ற உத்தரவுடன் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.