தமிழ் தேசிய பரப்பிற்குள் செயற்படும் அனைத்து கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படவேண்டும்’ என புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சம்பந்தனிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி விரிவான கடிதம் ஒன்று இரா. சம்பந்தன் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விடயங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ள நிலையில், காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் ஒரு வாரத்தில் சிறந்த தீர்வினைத் தருமாறு வேண்டுகோள் முன்வைக்கப்ட்டுள்ளது.