எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கில் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஏனைய மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.