நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (7) 10:15 மணியளவில் முதலாவது ஜெனரேட்டர் மின் கட்டத்துடன் இணைக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் திகதி ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டது.

நிலக்கரி இருப்புகளை நிர்வகிப்பதற்காகவும் பராமரிப்பு நோக்கங்களுக்காகவும் ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.