1 வயதான பாடசாலை மாணவியின் தலைமுடியை வெட்டியதாகக் கூறப்படும் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டதாக கஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் தாயாருடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறையடுத்து, பழிவாங்குவதற்காக சிறுமியின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயாருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, அவரைத் தேடி, கணவனும் மனைவியும் சென்றுள்ளனர். அப்போது சிறுமி மட்டும் வீட்டில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்

சிறுமியிடம் அவரது தாயைப் பற்றி விசாரித்து, அவர் வீட்டில் இல்லை என்று கூறியதையடுத்து, தம்பதியினர் சிறுமியைப் பிடித்து தலைமுடியை வெட்டியுள்ளனர்.

தாய் வீட்டுக்கு வந்ததும், வெட்டிய தலைமுடியைக் காட்டி, நடந்ததைச் சொல்லியுள்ளார் சிறுமி.

தாயும், சிறுமியும் வெட்டிய தலைமுடியை பையில் வைத்துக்கொண்டு போலீசில் புகார் அளித்தனர்.

சிறுமியின் வாக்குமூலத்தின்படி, கணவன்,மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் இருவரும் கஸ்பேவ பொலிஸ் பிரிவில் வசிப்பவர்கள்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக வெட்டப்பட்ட முடிகளும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.