உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து முதலாவது அரசியல் கூட்டணி இன்று உத்தியோகப்பூர்வமாக உதயமாகவுள்ளது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுர பிரியதர்சன யாப்பா அணி என்பன இக்கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன.

கூட்டணி அங்குரார்ப்பண நிகழ்வு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

புதிய கூட்டணி குட்டி தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.