திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த குறித்த நபரை மஹதிவுல்வெவ வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போதிலும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(3)மாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மஹதிவுல்வெவ-01ம் கண்டத்தில் வசித்து வரும் டபிள்யூ.எம்.வசந்த திசாநாயக்க (35வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப். முபாரக்