ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு வருகைதந்தார்.

இன்று மு.ப. 11.15 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகைதந்த ஜனாதிபதியை, சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோர் வரவேற்று சபை மண்டபத்துக்குள் அழைத்துவந்தனர்.

அதனையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி சபைக்கு வருகைதந்தார்.

சபையில் உறுப்பினர்களின் வாய்மூல விடைகான கேள்விகள் மற்றும் அதற்கான பதிலளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி நண்பகல் 12.00 மணிவரை சபையில் இருந்தார்.

மேலும் அவர் இதன்போது பிரதமருடன் உறையாடிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.