தளம்
பிரதான செய்திகள்

17ம் திகதி தொடக்கம் இவற்றுக்கெல்லாம் தடை!

எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் வீடுகளிலும் மண்டபங்களிலும் திருமண வைபங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறித்துள்ளார்.

அத்துடன், இன்று நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேநேரம், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோரை விடவும் அதிகமானோருக்கு ஒன்றுகூட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறும் அரசாங்கம் கோருவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

மனைவியின் சகோதரியை அடைத்து வைத்து துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

Fourudeen Ibransa
2 years ago

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலிருந்து ரிஷாட் பதியூதீன் விடுதலை…!

Fourudeen Ibransa
2 years ago

பல்கலைக்கழக மாணவிகளுக்கு அந்தரங்கத்தை காட்டும் ஆசாமிகள்! – 300 பேர் கையெழுத்துடன் முறைப்பாடு….!

Fourudeen Ibransa
1 year ago