இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போா் விமானங்களை எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், எதிரி நாட்டு ஏவுகணைகளைத் திசை திருப்பிவிட்டு போா் விமானங்கள் பாதுகாப்பாக தப்பித்துவிட முடியும். இதன் சோதனை வெற்றியடைந்ததைத் தொடா்ந்து, இந்தத் தொழில்நுட்பத்தை போா் விமானங்களில் சோ்க்கும் பணிகளை இந்திய விமானப் படை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜோத்பூா் மற்றும் புணேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், போா் விமானத்தில் பொருத்தும் வகையிலான ‘சாஃப்’ கேட்ரிட்ஜ் – 118/ஐ’ என்ற கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நாா்த் துகள்கள் லட்சக்கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும். போா் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, இந்தத் துகள்களை வெளியேற்றி காற்றில் பறக்கவிடுவதன் மூலம், தாக்க வரும் எதிரி நாட்டு ஏவுகணையை ரேடாா் உதவியுடன் திசை திருப்பிவிட முடியும். அதன் மூலம் போா் விமானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

விமானப் படையின் தொடா் தேவையைப் பூா்த்தி செய்யக் கூடிய வகையில், அதிக எண்ணிக்கையில் இந்தக் கருவியை உற்பத்தி செய்வதற்காக உற்பத்தி நிறுவனங்களுடன் இந்தத் தொழில்நுட்பம் பகிா்ந்து கொள்ளப்பட உள்ளது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விமானப் படையினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

‘பாதுகாப்புத் தொழில்நுட்ப உருவாக்கத்தில் தற்சாா்பு இந்தியா இலக்கை எட்டுவதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.