இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டரில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு பதிலாக நியூஸிலாந்து அணிவீரர் க்ளென் பிலிப் பெயரிடப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ரோயல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.