தளம்
பிரதான செய்திகள்

நாடு முடக்கப்பட்டிருப்பது போல் தெரியவில்லை.!

நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த வாரம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம் என்னவென்றால் கொவிட் காரணமாக நாட்டை தொடர்ந்து முடக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அர்ப்பணிப்பதற்கு மக்கள் தயாராகுமாறு மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்.

மேலும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 200 வரை நெருங்கி இருக்கின்றது. நாட்டை மூன்று வாரங்களுக்காவது முடக்கவேண்டும் என்றே நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு தெரிவித்து வந்தோம். இருந்தாலும் அரசாங்கம் 10 நாட்களுக்கு நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது. என்றாலும் வீதிக்கு சென்று பார்த்தால் பொது மக்கள் வீதிகளில் இறக்கின்றனர். நாடு முடக்கப்பட்டிருப்பது போல் தெரியவில்லை. இவ்வாறான முடக்கத்தை நாங்கள் கோரவில்லை.சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கும் முறையிலான முடக்கமே தேவையாகின்றது என்றார்.

Related posts

இணையத்தில் கசிந்த ‘சந்திரமுகி 2’ படத்தின் கதை….!

Fourudeen Ibransa
1 year ago

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 129 பேர் தடுத்து வைப்பு…!

Fourudeen Ibransa
1 year ago

கொரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 28½ லட்சத்தை தாண்டியது.!

Fourudeen Ibransa
3 years ago