ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அந்நாட்டில் ஆட்சி அமைப்பது குறித்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களால் முடிந்த அளவிற்கு காபூல் விமான நிலையத்திற்கு விமானங்களை அனுப்பி ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை அங்கிருந்து மீட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தலிபான்களின் செய்தி தொடர்பாளர் வுhந ளுரn என்னும் பத்திரிகை நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது ஆப்கானிஸ்தானிலிருக்கும் வெளிநாட்டுப் படைகள் தலிபான்கள் கொடுத்த காலம் முடிவதற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றுள்ளார்.

அவ்வாறு வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவில்லையென்றால் போர் ஏற்படும் சூழல் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.