இலங்கையில் கொவிட் வைரஸ் பரவ ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று (30) குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனக வக்கும்புர மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் மாத்திரமே சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.