மற்றுமொரு அரச நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் திடீரென பதவி விலகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரை சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரான துஷான் குணவர்தனவே இவ்வாறு இராஜினாமா செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தொடர்ச்சியாக தனக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே இவ்வாறு பதவிவிலகுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் கடந்த சில நாட்களாக அரச நிறுவனங்களின் உயர் பதவிகளிலிருந்து பலர் இராஜினாமா செய்து வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.