நாட்டை கொண்டு செல்வதற்கு அரசாங்கத்திடம் எந்த வேலை திட்டமும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஆட்சிக்கு வரும் அரசாங்கம் மக்களின் அன்றாட தேவைகளையாவது பூர்த்தி செய்துகொள்ள வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். ஆனால் அரசாங்கத்துக்கு அதனை செய்ய முடியாமல் போயிருக்கின்றது.

அதனால் அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு இன்னும் நீண்டகாலம் செல்லாது. நாட்டை அபிவிருத்தியின்பால் கொண்டுசெல்ல ஐக்கிய தேசிய கட்சியிடம் முறையான வேலைத்திட்டமும் உறுதியான கொள்கையும் இருக்கின்றது என்றார்