தளம்
உலகம்

அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஜோ பைடன் – ஜி ஜின்பிங் இடையில் சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்றைய தினம் தங்களது முதல் இருதரப்பு சந்திப்பை நடத்தினர்.

தாய்வான், ஹொங்கொங் மற்றும் பீஜிங்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீனாவின் மேற்குப் பகுதியான சின்ஜியாங்கில் முஸ்லிம்களை நடத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளின் உறவு மோசமடைந்து வரும் நிலையில் இருவரும் காணொளி மூலமாக பேச்சுவார்த்தையை திங்களன்று நடத்தியுள்ளனர்.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் வெளிப்படையான மோதலுக்கு மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தலைவர்களாக நம் இருவருக்கும் பொறுப்பு உள்ளது என்று ஜோ பைடன் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பீஜிங்கில் இருந்து பேசிய ஜி, பைடனை “எனது பழைய நண்பர்” என்று குறிப்பிட்டார், மேலும் போட்டியாளர்கள் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும். மற்றும் சீனாவும் அமெரிக்காவும் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஜனவரியில் பைடன் பதவியேற்றதிலிருந்து இரு தலைவர்களும் இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளனர்.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஜி வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை, நேருக்கு நேர் உச்சிமாநாட்டின் வாய்ப்பை நிராகரித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மனைவிகளின் அனுமதியுடன் உக்ரேனிய பெண்களை சீரழிக்கும் ரஷ்ய வீரர்கள்…!

Fourudeen Ibransa
1 year ago

பிரித்தானிய இளம்பெண்ணின் உயிரை பறித்த கனேடிய நிறுவன தயாரிப்பு!

Fourudeen Ibransa
2 years ago

53 பேருடன் மாயமாகிய இந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல்!

Fourudeen Ibransa
3 years ago