யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின்பு பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் யாஷிகா மிகவும் பிரபலமானார். இதைதொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

இவர் கைவசம் சல்பர், எஸ்.ஜே. சூர்யாவின் கடமையை செய், மகத்தின் இவன் தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா உள்பட ஏராளமான படங்கள் உள்ளது. இவ்வளவு பிஸியாக இருந்த யாஷிகா கடந்த வருடம் ஜூலை மாதம் எதிர்பாராத வகையில் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவரது தோழி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், சுமார் 4 மாதமாக படுத்தபடுக்கையாக இருந்த யாஷிகா, தற்போது எழுந்து நடக்கும் அளவுக்கு குணமாகி உள்ளார். யாஷிகா மீண்டும் ஒப்பந்தமான படங்களில் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆரம்ப காலங்களில் வாய்ப்புக்காக பல இடங்களை நாடியுள்ளார். அங்கு பலரும் இவருக்கு பாலியல் தொல்லை தந்துள்ளதாக பகீர் தகவலை கூறியுள்ளார். இதனால் அப்பட வாய்ப்பை உதறிவிட்டாராம். சினிமாத்துறையில் இதுபோன்ற பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று யாஷிகா கூறி உள்ளார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா சினிமாவுக்கு வந்த புதிதில் என்னிடம் ஒருவர் போன் செய்து அட்ஜஸ்ட் செய்வீர்களா என்று கேட்டார் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். சினிமா துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறையில் உள்ள பெண்களுக்கும் இது போன்ற பிரச்சினைகள் உள்ளது என கூறியுள்ளார்.