எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியாக போட்டியிடுவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே தனது தேர்தல் சபைகளை பலப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயகம் பற்றி நிறைய பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.