சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என அரசில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

” தற்போதைய அரசு பதவியேற்றதன் பின்னர் சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் வரி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.” – என பங்காளிக்கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.