அரசாங்கத்தை பிரதிநிதுத்துவம் செய்யும் சிறிய கட்சிகள் கூட்டமைப்பானது இன்று தங்களுடைய முன்மொழிவை அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. முழு நாடும் சரியான பாதைக்கு என்றுதான் அந்த முன்மொழிவுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். முழு நாடும் சரியான பாதைக்கு எடுப்பதற்கு அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய கைவிடப்பட்ட செட் ஒன்று தான் தயாராகியுள்ளது. வழிதவறிய கூட்டமொன்று. தங்களுடைய பாதை மாத்திரம் வழி தவறியதன்றி நாட்டின் பாதையை தவறச்செய்து ராஜபக்சக்களில் இவ்வளவு காலம் சாய்ந்து கொண்டு வயிற்றுப்பசியை பாதுகாத்த கூட்டணி. 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு கை உயர்த்தி மக்களுடைய ஜனநாயக உரிமைகளை ராஜபக்சக்களுக்கு முன் தாரை வார்த்தவர்கள். பெசில் ராஜபக்ஷ என்ற ஏழு மூளையுடைய அறிஞரை பாராளுமன்றம் வரை கொண்டுவந்து நிதியமைச்சர் பதவியை வழங்கி மக்களது இறைமையை கொள்ளை கொள்ளையடிப்பதற்கு வழி சமைத்த குழுவினர்.

அவ்வாறு சொல்லி அவர்கள் அரசாங்கத்திற்கு முன்மொழிவை முன்வைப்பதற்கு உரிமை இல்லை என்று ரட்டே ரால குறிப்பிடுவதில்லை. ரட்டே ரால கேட்பது இவ்வளவுதான். 20ஆவது திருத்தத்தை கொண்டு சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு சரியான பாதையை சொல்ல முடியாதவர்கள், நாட்டு வளங்களை விற்றபோது நாட்டுக்கு சரியான பாதையை சொல்ல முடியாதவர்கள், பாரியளவிலான ஊழல் மோசடிகள் நடைபெறுகின்ற பொழுது அதனை நிறுத்துங்கள் என்று சொல்ல முதுகெழும்பற்றவர்கள், அந்தக் கள்வர்களோடு இணைந்து ஒன்று சேர்ந்து நாட்டினுடைய பொது சொத்துக்களை சூறையாடியவர்கள் அதேபோன்று கொமிஸ் எடுத்த குழுவினர் தற்போது நாட்டுக்கு சரியான பாதையை சொல்வதற்கு வந்திருக்கின்றார்கள். ராஜபக்சக்கள் வேலையை எடுத்து விட்டு தூக்கி எறிந்தவர்கள் நாடு தொடர்பில் சிந்திக்கும் அபூர்வ தேசப்பற்றுடையவர்கள் என சொல்வதற்கு மீதமாகவுள்ள பாதை என்ன? அதனால் முழு நாடும் சரியான பாதைக்கு கொண்டு செல்ல இந்த குழுவினரது அரசியல் தேவைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். ரட்டே ரால குறிப்பிடுவது இந்த முன்மொழிவை அரசாங்கம் 5 சதத்துக்கேனும் கணக்கெடுக்க போவதில்லை. அது முன்மொழிவை முன்வைத்தவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

முன்மொழிவில் 10 காரணங்கள் இருக்கிறதாம். அது என்னவென்று ரட்டே ராலவுக்கு தெரியாது. அதனை பார்ப்பதற்கு இன்று மாலை வரை இருக்க வேண்டும். நல்ல முன்மொழிவு இருந்தால் அது தொடர்பில் நாங்கள் கதைப்போம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. இருப்பினும் ரட்டே ரால இன்று கதைப்பது அந்த முன்மொழிவு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இந்த முன்மொழிவை அரசாங்கத்திற்கு முன்வைப்பதன் மூலம் இவர்களது அரசியல் நோக்கம் என்ன என்பதே ஆகும். அதனை தெரிந்து கொள்வதற்கு தற்போது அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய அரசியல் நிலவரத்தை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் உங்களுக்கு தெரிந்திருக்கும் கடந்த காலத்தில் அரசாங்கத்தின் உள்ளே இருந்த அரசியல் முரண்பாடு. அது தொடர்பில் ரட்டே ரால தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார்.

அரசாங்கத்தின் உள்ளே உள்ளக முரண்பாட்டை ஏற்படுத்திய குழுக்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த சிறு கட்சி கூட்டணி, அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அடுத்ததாக மொட்டுவின் சிரேஸ்ட்ட உறுப்பினர்கள், அதற்கடுத்து ராஜபக்ச குடும்பத்தினுள்ளே அதிகார போட்டி ஒன்றும் காணப்படுகின்றது. அதாவது நாமல்- பெசில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி போராட்டம். முன்மொழிவை முன்வைக்கும் சிறு கட்சி கூட்டணி குறிப்பிடுவது அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய நேரடியான பெசில் விரோதிகள். அதாவது நாமலின் எதிரிகளின் எதிரி அல்லாவிடினும் நாமலின் நண்பர். அவ்வாறு நினைத்தாலும் நினைக்காவிடினும் அவர்கள் அனைவரும் மஹிந்த தரப்பினர், இல்லையென்றால் தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் மறைமுகமாக நாமல் தரப்பினர், தற்போது கோட்டா தரப்பினர் என்ற குழுவினர் மொட்டுவினுள் கிடையாது.

போகவுள்ள உள்ள ஜனாதிபதிக்கு கூட்டணி அமைப்பது கிடையாது. அந்த கூட்டணி ஏற்படுத்தப்படுவது உருவாக உள்ள ஜனாதிபதிக்காக. இந்த இடத்தில் கடந்த காலம் முழுவதும் சிறு கட்சி கூட்டணி சேர்ந்தவர்கள் தனிப்பட்ட ரீதியாகவும் கூட்டணி அடிப்படையிலும் அவர்கள் பெசிலோடு மோதினர். இல்லை எனின் பெசிலின் சகாக்களோடு அவர்கள் முரண்பட்டணர். இருப்பினும் அந்த போராட்டத்தில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. உண்மையில் நடைபெற்றது அவர்கள் அரசாங்கத்தின் உள்ளே கொச்சைப்படுத்தப்பட்டது மாத்திரம்தான்.பெசில் அரசாங்கத்தின் உள்ளே அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்கள் மீண்டும் மீண்டும் கொச்சை படுத்தப்பட்டே இருப்பார்கள்.

இதனால் கடந்த காலத்தில் அவர்கள் பெசிலுடன் முரண்பாட்டை முற்று முழுதாக நிறத்தி ஒருபக்க ஓய்வில் இருந்தனர். அந்த ஓய்வு விடுகை என்பது அடுத்த போராட்டத்திற்கு தயாராக மேற்கொள்கின்ற ஒரு சிறிய ஓய்வாகும். இந்த முன்மொழிவு போராட்டத்திற்கு மீண்டும் ஒரு போராட்டமாக ஆரம்பிக்க முடியுமாக இருப்பது இந்நிலையை ஏற்படுத்தியதன் பின்னரே. ஒரு பக்கத்தில் அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு அடி முன் நோக்கி செல்வதற்கு இயலாதவாறு நாடு இறுகியுள்ளது. அடுத்த பக்கத்தில் அரசாங்கத்தின் உள்ளே நாமல் -பெசில் முரண்பாட்டை இவர்கள் தேவையான அளவுக்கு உசுப்பேற்றுவது. நாமலிற்காக எஞ்சியுள்ள காலத்தை போராட அவருடைய தந்தை முன் வந்திருக்கின்றார். அதனால் இந்த முன்மொழிவுகளுள் மஹிந்தவும் பின்னால் இருக்கின்றார். இம்முறை அவர்கள் வந்திருப்பது அரசாங்கத்தை மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் சரியான வழியை காட்டுவதற்கு. அவ்வாறு சொன்னால் யாருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இந்த இடத்தில் இருப்பது உண்மையான அரசியல் அல்ல.

இவ்வேலைத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக ஒரு கல்லில் இரண்டு குருவிகளை கொல்லுவதாகும். ஒன்று அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய பெசில் பறவை. அடுத்ததாக வெளியிலே ஏற்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பறவைகள். உள்ளே இருக்கக்கூடிய அந்தக் குருவியை என்ன செய்தாலும் ரட்டே ராலவுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. இருப்பினும் வெளியே உள்ள அரசாங்க எதிர்ப்பு நிலையை இந்த சந்தர்ப்பவாதிகள் கொள்ளையடிப்பதற்கு விட முடியாது. அது அவர்களுக்கு சார்பான வகையில் முகாமைத்துவம் செய்ய முடியாது. அது இந்த நாட்டினுடைய சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்படுத்திய அபிப்பிராயமாகும். அதனை ஏற்படுத்தியவர்கள் நடுவீதியில் இன்னல் படுகின்ற சந்தர்ப்பத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு சிரித்தவர்கள் தற்போது மனித பற்றுள்ளவர்களாக வருவதற்கு முயற்சி செய்கின்றார்கள். உண்மையில் இந்த முன்மொழிவு ஊடாக இவர்கள் அரசாங்கத்தின் உள்ளே மேற்கொள்ளவுள்ள வழிநடாத்தல் பிரிவுகள் பல காணப்படுகின்றன. ஒன்றுதான் அரசாங்கத்துக்குள் இருக்கக்கூடிய பெசில் எதர்ப்புவாதிகளை ஒரு குவியலாக ஒன்று சேர்ப்பது. பெசிலிற்கு தனிமையாக முகம் கொடுக்க முடியாமல் உள்ளமையால் ஒன்று சேர்ந்து முகங்கொடுப்பதற்கான உபாய ரீதியான நுட்பங்களுக்கு மாறுவதற்கான பயணத்தை செய்வதாகும்.

இந்த இடத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மிக முக்கியமான சாதகத் தன்மை உள்ளது. இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளே இருக்கக்கூடிய எதிர்ப்பு இருப்பது பெசில் எதிர்ப்பு தன்மை அல்ல. எதிர்ப்பு இருப்பது ராஜபக்ச விரோதமே. பெசில் எதிர்ப்பு மற்றும் ராஜபக்ச எதிர்ப்பை எடுக்க விமலிற்கு தெரியும். இந்த இடத்தில் சிறு கட்சிகள் கூட்டணியை போன்றே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அரசாங்கத்தின் உள்ளே முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் சம தன்மை உடையதாக காணப்படுகின்றது. அதுதான் ஏன் இன்னமும் இந்த அரசாங்கத்தின் உள்ளே இருப்பது என தற்போது அவர்களது கட்சியினுடைய அங்கத்தவர்கள் கேட்கின்றார்கள். இன்னும் அவர்களிடம் பேச்சு வாங்கி ஏன் அவர்களோடு இணைந்து இருப்பது என்ற கேள்விக்கு அவர்களுடைய அங்கத்தவர்களுக்கு நியாயமான ஒரு பதிலை வழங்க வேண்டும். அதற்காக இவர்கள் முன்வைக்கின்ற வேலை திட்டம் தான் இது. சுருக்கமாக தங்களுக்கு வெளியே வருவதற்கு முடியாத தன்மையின் காரணமாக தாங்கள் வெளியேறி செல்ல சரியான இடம் இல்லாததால் அவர்களது அங்கத்தவர்களுக்கு தேசப்பற்று தன்மையை காட்டுவதற்கு இதனை செய்கின்றார்கள்.

உண்மையில் தற்போது அவர்கள் சொல்லக்கூடியதாக இருப்பது நாடு சரியான பாதைக்கு கொண்டு செல்ல நாங்கள் அரசாங்கத்திற்கு உள்ளே இருந்து பைட் பண்ணுகிறோம் என்று. அதற்காக முன்வைத்துள்ள 10 முன்மொழிவுக்கு ராஜபக்சக்கள் தற்போது பயந்து உள்ளார்கள் என. மடத்தனம். ராஜபக்ச குடும்ப ஆட்சியை சரியான பாதைக்கு கொண்டு செல்வதனைவிட பைத்தியமான விடயம் ஒன்றும் இல்லை. இருப்பினும் இவர்களது மூன்றாவது நோக்கமானது சிறிதளவு விஞ்ஞான ரீதியான ஒன்றாகும். அதுதான் பெசில் மற்றும் நாமலிடையே இருக்கக்கூடிய அதிகார முரண்பாட்டை முகாமை செய்வதற்கு முயற்சிப்பதாகும். அது அவர்களுடைய நலவிற்கு செய்கின்ற ஒரு விடயம்.
அதனால் இந்த முன்மொழிவுக்கு மஹிந்த -நாமல் அணி சாதகமான பிரதிபலிப்பை ஏற்படுத்துவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ரட்டே ரால குறிப்பிடுவது இம் முன்மொழிவின் உண்மை நோக்கமாக மஹிந்த அணியினரின் கதவைத் திறப்பதாகும். குறைந்தபட்சம் கதவை திறக்க முடியாது விட்டாலும் முடியுமான சிறிய ஜன்னல் ஒன்றையாவது திறப்பது. அடுத்ததாக வரக்கூடிய பிரச்சினை இவர்கள் வெளியில் ஏற்படுத்திய அரசாங்க எதிர்ப்பு குருவிகளை கொல்வதற்குறிய முயற்சியாகும். தற்போது அரசாங்கத்தை சுற்றி இருந்த அணிகள் அரசாங்கத்தை விட்டு செல்வதற்கு ஆரம்பித்துள்ளனர்.

அனைவரும் எதிர்க்கட்சிக்கு சாய்கின்ற தன்மை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அரசாங்கம் மேற்கொண்ட பரிசீலனையில் அது உறுதிப்படுத்தப்பட்டது. நகர பிரதேசங்களில் தேசிய மக்கள் கட்சி அதேபோன்று 43 ஆவது படையணி ஆகியன ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று கிராமிய அணிகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆக்கிரமித்துக் கொண்டு செல்கின்றது. அதற்குப் புறம்பாக கருவின் சமூகநீதிக்கான தேசிய இயக்கம் புதிய ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு செல்கின்றது. தேசிய மக்கள் எழுச்சி, 43 ஆவது படையணி, சமூக நீதிக்கான தேசிய முன்னணி முன்வைத்துள்ள வேலைத்திட்டங்களில் ஏதோ ஒரு சமூக கருத்தாடல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதனோடு இணைபவர்களை ஆராய்த்து பார்த்தால் அவர்கள் மொட்டுவிலிருந்தே வருகின்றார்கள் என்பது காணக்கூடிய வெளிப்படையாகும். இல்லையென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து. அதனால் அரசாங்கத்தை கைவிட்டு வருகின்ற இந்த கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ,ஜேவிபி, 43 ஆவது படையணி இல்லை என்றால் அவர்கள் வேறு ஒரு இடத்தை தெரிவு செய்வதனை நிறுத்த வேண்டும்.ரட்டே ராலவின் கட்சி சார்பற்ற தன்மைக்கு அதிகமானோர் ஒட்றிணைகின்றனர்.இவர்கள் செய்வது அவ்வாறான, அவ்வாறு செல்லுமிடமற்றவர்களுக்கு செல்வதற்கான சரியான நிறுத்துமிடத்தை கட்டியெழுப்பவே. இவர்கள் நினைக்கின்றார்கள் அரசாங்கத்திலிருந்து வேண்டாம் என்று வருகின்ற அங்கத்தவர்களை ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி, நாற்பத்தி மூன்று அல்லது வேறு இடத்திற்கு அவர்கள் செல்வதற்கு முன்னர் அந்த தங்குமிடத்திற்கு அவர்கள் வருவார்கள் என்று .இருப்பினும் இவர்கள் மேற்கொள்வது அவ்விடத்தில் இணைபவர்களை மீள திருப்பி ராஜபக்ச பக்கம் ஈர்க்க வேறு பாதையால் கொண்டு செல்வதாகும்.

இதன்படி இதனை இவர்கள் செய்வது ராஜபக்சகளுக்காக தங்களுடைய இறுதி பொறுப்பைய நிறைவேற்றுவதாகும். அதனைவிட இதனுள்ளே பிற அரசியல் அர்த்தம் ஒன்றும் கிடையாது. உண்மையான அரசியல் தலையீட்டை செய்ய அவர்கள் விரும்பினால் முதலில் அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறியிரல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் செய்கின்ற எந்த ஒரு செயற்பாட்டிலும் விசுவாசம் கொள்ள முடியாது. ஏனென்றால் 2013-ம் ஆண்டும் விமல் இவ்வாறான ஒரு முன்மொழிவை தாரைவார்த்தார். இன்றும் நடைபெறுவது அதுதான். அதனை உணர முடியாதவர்கள் நாளை அதனை விளங்கிக் கொள்ள முடியும். அதுவரை ரட்டே ராலவுக்கு பேச்சுக்களை கேட்க வேண்டி வரும்.

அப்படியாயின் போய் வருகின்றேன் கடவுள் துணை ,வெற்றி கிட்டட்டும்,

இப்படிக்கு
ரட்டே ரால