அடுத்து நடைபெறும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துதான் போட்டியிடும் – என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் சிறிபாலடி சில்வா இவ்வாறு கூறினார்.

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கென தனித்துவம் இருக்கின்றது. அடுத்து வரும் தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடுவோம். தேர்தலின் பின்னர் எமது கொள்கையை ஏற்பவர்களுடன் கூட்டணி அமைக்கலாம்.” என்றும் நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டார்.