தளம்
பிரதான செய்திகள்

தேவையான நேரத்தில் பதவிகளைத் துறந்துவிட்டு போராடத் தயார். .!

“நாட்டை மீட்டெடுக்க எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நாம் தயார். தேவையான நேரத்தில் பதவிகளைத்  துறந்துவிட்டு, மக்களோடு மக்களாக வீதியில் இறங்கிப் போராடுவோம்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசில் நாம் அங்கம் வகித்தாலும் பங்காளிக் கட்சிகளுடனான எமது அரசியல் நடவடிக்கை தொடரும். நாம் எவரையும் கைவிடவில்லை.

தேவையான நேரத்தில் பதவிகளைத் துறந்துவிட்டு போராடத் தயார். எவரினதும் வாலாக இருக்க நாம் விரும்பவில்லை. எதிர்காலத்தில் பலமான கூட்டணி அமைக்கப்படும்” – என்றார்.

Related posts

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘யுகதனவி’ உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும்.!

Fourudeen Ibransa
2 years ago

பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Fourudeen Ibransa
2 years ago

உக்ரைனில் ஒரு நாஸிப் படை!

Fourudeen Ibransa
2 years ago