” லீகுவான் இறந்துவிட்டார். மகாதீர் மொஹமட் வீட்டுக்கு சென்றுவிட்டார். ” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
” கோட்டாபய ராஜபக்ச என்பவர் லீகுவான் போன்றவர். மஹிந்த ராஜபக்ச என்பவர் மகாதீர் மொஹமட் போன்றவர். எனவே, இலங்கைக்கு லீகுவான் மற்றும் மகாதீர் ஆகிய இருவரும் கிடைத்துள்ளனர். இவர்கள் நாட்டை மீட்பார்கள்.” – என்று ஆளுங்கட்சியில் இருந்தபோது விமல் வீரவன்ச உரையாற்றியிருந்தார்.
தற்போது அவர் அந்த அரசில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லீகுவான், மகாதீர் மொஹமட் எல்லாம் எங்கே என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விமல், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்