தளம்
சிறப்புச் செய்திகள்

5 வயது சிறுவனை களனி ஆற்றில் வீசிய தாய் கைது.!

வத்தளை – மட்டக்குளி பிரதான பாலத்திலிருந்து 5 வயது சிறுவனை தாயார் களனி ஆற்றில் வீசிய சம்பவம் நேற்று இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண்ணும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இந்தநிலையில் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் இதுவரையில் மீட்கப்படாத நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதற்கமைய, குடும்ப நெருக்கடி காரணமாகவே தான் இதனை செய்துள்ளதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த கணவர்  இறந்துவிட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு முதல் திருமணத்தின் மூலம்  15 வயது பிள்ளை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

42 வயதான அந்த பெண் வத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், அவர் சில காலமாக நோயினால் அவதிப்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், சந்தேகநபர்  5 வயது சிறுவனின் தாய் என கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Related posts

புதிய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது.” –

Fourudeen Ibransa
2 years ago

மக்கள் ஆணை இல்லை என பலரும் கூறினாலும் எம்மை பொறுத்தவரை இதுதான் மக்கள் ஆணை .!

Fourudeen Ibransa
2 years ago

ரஷ்ய மந்திரி யெவ்ஜெனி ஜினிச்சேவ் காலமானார்!

Fourudeen Ibransa
3 years ago