தளம்
சிறப்புச் செய்திகள்

இனி கடவுச்சீட் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியாது!

இலங்கையில் ஜூலை 20 ஆம் திகதி வரை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது.

நாளாந்தம் விண்ணப்பிக்கப்படும் வரையறை மீறப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நாட்களில் நாளாந்தம் 2500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த மாதத்தில் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

120 பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ‘ஜலேபி பாபா’ கைது…!

Fourudeen Ibransa
1 year ago

ரஷ்யாவின் போர்க் கப்பலுடன் இரண்டு நீர்மூழ்கிகள் நாட்டை வந்தடைந்தன

Fourudeen Ibransa
3 years ago

மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதால் சம்பளத்தை வழங்க முடியாது.!

Fourudeen Ibransa
3 years ago