தளம்
Breaking News

உத்தியோகபூர்வமாக பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய!

இலங்கையின் 08வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் தனக்கு கிடைத்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய  ராஜபக்ஷவை பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டது.

எரிவாயு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நாடுகளின் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலால் ஏற்படவுள்ள மாற்றம் – அமெரிக்கா தகவல்!

Fourudeen Ibransa
2 years ago

அவசர கூட்டத்திற்கு பிரதமர் ரணில் அழைப்பு! ஜனாதிபதியாக ரணில்..!

Fourudeen Ibransa
2 years ago

2023 மார்ச்சில் நாடாளுமன்றம் கலைப்பு..?

Fourudeen Ibransa
2 years ago