தளம்
வட மாகாணம்

துரைராஜசிங்கம் பிரமிளா என்ற இளம்பெண் சுட்டுக்கொலை!

வவுனியா- நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுங்கேணிஇ பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் நெடுங்கேணிஇ சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21 வயது) என்ற யுவதியே மரணமடைந்தவராவார்

குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த யுவதி கட்டு துவக்கு வகை துப்பாக்கியாலே சுடப்பட்டு மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் சுடப்பட்டார்? மற்றும் யார் இந்த கொடூர சம்பவத்தை நடத்தியது? என்று வவுனியா நெடுங்கேணி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போதை மாத்திரை விற்பனையில் மருத்துவர்களா?- யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி.

Fourudeen Ibransa
2 years ago

டெங்கு காய்ச்சலுக்கு வயோதிப பெண் பலி…!

Fourudeen Ibransa
1 year ago

எது நியாயமோ எது சரியோ அதை யார் செய்தாலும் சரி என்பேன்.!

Fourudeen Ibransa
3 years ago