தளம்
வட மாகாணம்

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு – யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேந்தான்குளம் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள் இளவாலை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்தனர்.

அதற்கிடையில் சடலம் கடல் அலை மூலம் கரை ஒதுங்கியது.

இதையடுத்து நீதிவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டின் இறுதியிலும் இவ்வாறு சடலங்கள் யாழ். மாவட்ட கடற்கரையோரத்தைச் சூழக் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்ப்பாணத்தில் வெள்ளைப்பிரம்புதினமும் நடைபெற்றது!

Fourudeen Ibransa
2 years ago

முதலமைச்சர் வேட்பாளராக மணிவண்ணன்?

Fourudeen Ibransa
3 years ago

கனகராயன்குளத்தில் ரயில் பாதையில் ஆணின் சடலம்! – கொலை செய்யப்பட்டாரா…?

Fourudeen Ibransa
2 years ago