தளம்
வட மாகாணம்

டெங்கு காய்ச்சலுக்கு வயோதிப பெண் பலி…!

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மறுநாளான நேற்றுமுன்தினம் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு டெங்கு காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

Related posts

பசளை கிடைக்கும் வரை போராட்டம்.!

Fourudeen Ibransa
3 years ago

வடக்கு கிழக்கில் 25 வீத இராணுவக் குறைப்பு.!

Fourudeen Ibransa
1 year ago

இந்த வரவு – செலவு திட்டம் தனவந்தர்களாவதற்கானது.!

Fourudeen Ibransa
1 year ago