தளம்
கொழும்பு

நீர்கொழும்பில் கடத்தப்பட்ட 10 வயது சிறுவன் கொழும்பு கிராண்ட்பாஸில் மீட்பு

நீர்கொழும்பில் கடத்தப்பட்ட 10 வயது சிறுவன் கொழும்பு கிராண்ட்பாஸில் மீட்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல் காரணமாக குறித்த சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் பெண் ஒருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து ஹெரோயினை பெற்றுக்கொண்ட நபர் அதற்கான பணத்தை முழுமையாக செலுத்தாமையால், சிறுவன் கடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

22 ஆவது திருத்தம் மக்களை ஏமாற்றும் வேலை!

Fourudeen Ibransa
2 years ago

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் சட்ட ஆலோசனைக்காக அனுப்பிவைப்பு .!

Fourudeen Ibransa
2 years ago

21/4 தாக்குதல் – பிரதான சூத்திரதாரிகள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை? சஜித்

Fourudeen Ibransa
2 years ago