தளம்
அந்தரங்கம்

இணையத்தளத்தினுாடாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த இளம் யுவதி.!

இணையத்தளத்தினுாடாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த இளம் யுவதியொருவர் வெள்ளிக்கிழமை (02) வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாணந்துறை, வலான பிரதேசத்தில் வைத்து இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கண்டி-பூஜாபிட்டியவைச் சேர்ந்த 29 வயதுடை பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் நேற்று வெள்ளிக்கிழமை பாணந்துறை நீதவான நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இப்பாலியல் தொழிலுடன் தொடர்புடைய ஏனையோரைத் தேடி வாத்துவ காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குத் தொடர்ந்தும் பாரபட்சம்.!

Fourudeen Ibransa
3 years ago

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்?

Fourudeen Ibransa
3 years ago

ஐ.நா. இலங்கையை காப்பாற்றியுள்ளது

Fourudeen Ibransa
3 years ago