தளம்
சிறப்புச் செய்திகள்

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில் ஹிஷாலினியின் அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே, ஹிலாலினியின் அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதில் ‘என் சாவுக்கு காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக இதுவரையில் 40 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது.!

Fourudeen Ibransa
2 years ago

எவ்வித நிபந்தனையும் இன்றி நாட்டுக்காக சவாலை ரணில் ஏற்றுள்ளார். .!

Fourudeen Ibransa
2 years ago

என்னால் பொலன்னறுவைக்கு செல்லக்கூடியதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – மைத்திரிபால

Fourudeen Ibransa
3 years ago