தளம்
வட மாகாணம்

யாழ். பல்கலை நுழைவாயிலின் அருகில் போராட்டம்.!

யாழ். பல்கலை நுழைவாயிலின் வெளியே இன்று கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் மற்றும் பல்கலைக்கழகச் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருக்கும் திருத்தம் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனொரு பகுதியாக இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை ஒரு அமைதிப் போராட்டம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினரை உள்ளடக்கிய யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரின் அழைப்பில் இடம்பெறும் இந்தப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, புதிய அதிபர் சங்கம், முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் ஆகிய அமைப்புக்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

Related posts

விபரீத முடிவு எடுத்த 19 வயது மாணவி.!

Fourudeen Ibransa
1 year ago

காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழையில் மாபெரும் போராட்டம்..!

Fourudeen Ibransa
2 years ago

யாழ். மாவட்டத்தில் 8 பேரைப் பலியெடுத்த டெங்கு..!

Fourudeen Ibransa
1 year ago